கொழுந்தியாவுடன் ஓடிய தேங்காய் வியாபாரி : கள்ள காதலுக்காக மனைவியை கொல்ல ஆன்லைனில் விஷம் வாங்கிய கணவன்.!

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயதான தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அந்த வியாபரிக்கும் அவரது மனைவியின் தங்கையான 25 வயது திருமணமாகாத இளம் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது .இதனால் அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இது மனைவிக்கு தெரியவந்தது உடனே கணவர் மற்றும் தன் தங்கையை கண்டித்தார். அத்துடன் அவர் தனது தங்கையே தனது வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறினார். இந்த நிலையில் தேங்காய் வியாபாரியை திடீரென்று காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது தங்கையும் மாயமாகி இருந்தார் . தன் கணவருடன் தங்கை ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வியாபாரி மனைவி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவருக்கும் தனது தங்கைக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதால் அவர்கள் 2 பேரும் ஓடி விட்டனர் என்று கூறியிருந்தார் .இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .அதில் தேங்காய் வியாபாரி தனது கொழுந்தியாளுடன் மதுரையில் குடும்பம் நடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர் . மதுரை சென்று 2 பேரையும் மீட்டு செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது. – கடந்த 8 மாதங்களுக்கு முன் தன் கொழுந்தியாவுடன் தேங்காய் வியாபாரிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வியாபாரி மனைவி தனது கணவரை கண்டித்துள்ளார். எனவே கள்ளக்காதலுக்கு தடையாக இருப்பதால் அவரை கொலை செய்ய தேங்காய் வியாபாரி முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் ஆன்லைனில் விஷம் வாங்கியுள்ளார். பின்னர் தனது முடிவை கொழுந்தியாவிடம் தெரிவித்தார். அதற்கு அவர் அக்கா பாவம். அக்காவை கொலை செய்ய வேண்டாம். நாம் எங்காவது சென்று விடலாம் என்று கூறியுள்ளார். அதன் பின்னரே கடந்த மாதம் 17ஆம் தேதி கொழுந்தியாளுடன் வீட்டை விட்டு ஓடி உள்ளார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.