கோவையில் சேவல் சண்டை சூதாட்டம் – 7பேர் கைது..!

கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள நட்டுக்கல்பாளையம்-பழையூர் ரோட்டில் உள்ள ஓடை அருகே கோமங்கலம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ( 35 )சரவணன் (49) சதீஷ்குமார் (27) ராமன் ( 29 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல நெகமம் 1 மஞ்சம்பாளையம் இட்டேறி அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ( 34 ) உதயகுமார் ( 22 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட 2 சேவல்களும், ரூ 13 ஆயிரத்து 400 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.