மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,கணியூர் கங்கா லட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் பாப்பா ( வயது 72) இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அரிவாளன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த எஸ். வேலு (வயது 29) கோவை கே.ஜி. சாவடி சேர்ந்த சஞ்சீவி (வயது 33 ) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. 2 பேரும் சிறையில் இருந்த போது நண்பர்களாக பழகி உள்ளனர். சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்ததும் நகைக்காக கொலை செய்ததாக தெரியவந்தது. மேலும் இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.