பைக்கில் 14 கிலோ கஞ்சா கடத்தல் – வடமாநில வாலிபர்கள் உட்பட 6 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அவர்களிடம் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சிந்து பதன் (வயது 21) முகேஜா (வயது 32) மனு அகமது () வயது 27 )அமர்நாத் ( வயது 25) என்பது தெரிய வந்தது இவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும். இதை ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

இதே போல வடக்கி பாளையம் போலீசார் அங்குள்ள பி.. நாகூர் பஸ் ஸ்டாப் அருகே நடத்திய சோதனையில் கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் உடுமலைப்பேட்டை சாதிக் நகரை சேர்ந்த சாருன் ( வயது 26 )யுகேசி நகரை சேர்ந்த முகம்மத் முஸ்தபா வயது 23 என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது..