போதை பொருள் , கஞ்சா கடத்தல் – 5 பேர் கைது.!!

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (வயது 27) ஜெ .ஜெ. நகரை சேர்ந்த கவுதம் (வயது 27) சென்னை கோகுல் (வயது 23) திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ( வயது 24) என்பது தெரியவந்தது. போதை மருந்து கஞ்சா , 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது..

இதே போல ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி அங்குள்ள சாவித்திரி நகர் பழைய டாஸ்மாக் கடை அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார்.. அவரிடம் 5 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் அம்மன்குளம் கொண்ட சாமி லே அவுட்டை சேர்ந்த சண்முகம் என்ற விக் கு ( வயது 25 ) என்பது தெரிய வந்தது. இவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.