தொழில் போட்டியால் 3 பேருக்கு கத்திகுத்து – 2 பேர் கைது..!

கோவை உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்தவர் ராவுத்தர் கனி (வயது 25) இவர் கோவை வ.உ.சி பூங்கா அருகே பானி பூரி கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் ஆசாத் (வயது 32) சர்புதீன் ( வயது 29) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர் . இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆசாத், சர்புதீன் ஆகியோர் சேர்ந்து ராவுத்தர் கனியை கத்தியால் குத்தினார்கள். இதை தடுக்க வந்த ராவுத்தர் கனியின் அண்ணன் திப்பு சுல்தான் ( வயது 30) பக்கத்துக் கடைக்காரர் போஸ் கான் ஆகியோருக்கும் கத்தி குத்து விழுந்தது. இதில் காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசாத் ,சர்புதீன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்..