வேலை கிடைக்காததால் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை ….

கோவை அடுத்த சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் தேவராஜ் (வயது 22) பி.கம். பட்டதாரி. இவர் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார் .இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த தேவராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியம் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.