துணி வாங்க கடைக்கு சென்ற பெண்ணிடம் செயின் திருட்டு- பைக் ஆசாமிகள் கைவரிசை..!

கோவை அருகே உள்ள பி.என்.புதூர், கோகுலம் காலனி, 4 -வது வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் .இவரது மனைவி வானதி ( வயது 54) இவர் நேற்று ஆர் ,எஸ். புரம் வெங்கடசாமி ரோட்டில் உள்ள துணி கடைக்கு துணி வாங்க சென்றார். துணி எடுத்துவிட்டு கார் ஏற சென்றபோது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் டாலர் செயினை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து வானதி ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.