கோவை டாஸ்மாக் பாரில் 143 மதுபாட்டில்கள் பறிமுதல் – 2 பேர் கைது.!!

கோவை சங்கனூர் கண்ணப்ப நகரில் உள்ள டாஸ்மாக் கடை எண் (1555) பாரில் காலையில் மது விற்பனை நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது காலை 9 மணி 9 – 30 மணிக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்த 143 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பார்சப்ளையர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாரு சப்ளையர் முருகன் (வயது 42) ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்த கேஷியர் ஆனைமுத்து (வயது 48 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூப்பர்வைசர் செந்தில், விற்பனையாளர் மகேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.