வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு-பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க்-2வது வீதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இவரது மனைவி கீதா ( வயது 61) இவர் நேற்று மாலை சாய்பாபா காலனி எஸ் .ஆர். பி. ரோட்டில் நடைபயிற்சி செய்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன்தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டான்.இதன் மதிப்பு ஒரு 2 லட்சம் இருக்கும். இது குறித்து கீதா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார் . இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.