பொள்ளாச்சி ஏடிஎம் மையத்தில் பேட்டரிகள் திருட்டு..!

கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ராஜ் நாராயணா மில்லில் ஏ.டி.எம்..மையம் உள்ளது. இங்குள்ள அறையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 4 பேட்டரிகளை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அதன் பொறுப்பாளர் ராஜ்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.