தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 5 பேரின் செல்போன்கள் திருட்டு..!

கோவை: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றார்.
அப்போது அறையில் சரவண்னுடன் பணியாற்றும் கலைச்செல்வன், தினேஷ், லிங்கேஸ்வர், ஜெயக்குமார் ஆகியோரும் இருந்தனர். தூங்கும் முன்பு அனைவரும் தங்களது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு சென்றனர். காலை விடிந்ததும் பார்த்தபோது அவர்கள் 5 பேரின் செல்போனும் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து சரவணன் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை ஊழியர்களின் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.