ரூ.34 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் திருட்டு – கோவையில் துணிகரம்..!

கோவை சரவணம்பட்டி ராமகிருஷ்ணா மில் அருகே கடந்த 1999 -ம் ஆண்டு முதல் ஏர்செல் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ 11 லட்சம் இருக்கும் .இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி சென்னையை சேர்ந்த அர்ஜுனன் (வயது 49) சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல காந்தி மாநகர் ஹட்கோ காலனி பகுதியில் ஒரு கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மற்றும் எந்திரங்கள் பேட்டரிகள் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர்.இதன் மதிப்பு ரூ 11 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல காந்திமா நகர் ஹட்கோ காலனியில மற்றொரு கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரையும் யாரோ திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 24 ஆயிரம் இருக்கும். இது குறித்தும் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ 34 லட்சம் இருக்கும்..