மருமகளுக்கு செக்ஸ் மிரட்டல்- மாமனார் கைது..!

கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம் பாளையம், திருமுருகன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி புஷ்பலதா (வயது 38) இவர் தனது கணவர்,மகனுடன்சொந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.தரைத்தளத்தில் இவரது மாமனார் ராஜேந்திரன் (வயது 70) தனது இரண்டாவது மனைவி சாந்தி (வயது50 )என்பவருடன்வசித்து வருகிறார்..புஷ்பலதாவை வீட்டை காலி செய்யுமாறு மாமனார் ராஜேந்திரன் வற்புறுத்தினார். இதற்கு அவர் மறுத்தார் .இதனால் ஏற்பட்ட தகராறில் புஷ்பலதாவை தகாத வார்த்தைகளால் பேசி கீழே பிடித்து தள்ளிகாலால் மிதித்தாராம்.செக்ஸ் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து புஷ்பலதா பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து மாமனார் ராஜேந்திரனை நேற்று கைது செய்தார் இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி,மான பங்கமுயற்சி உட்பட 5பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.