நடைப்பயிற்சி சென்ற வாலிபரிடம் செல்போன் பறிப்பு..!

கோவை கணபதி மணியகாரம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரது அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.