ரீசார்ஜ் செய்ய வந்த வாலிபரிடம் பணம் பறித்த செல்போன் கடைக்காரர் கைது..!

கோவை : கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மகேஷ் ( வயது 34) இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றார்.அப்போது அந்த செல்போன் கடையின் உரிமையாளர் விஷ்ணு என்பவர் முகேசை மிரட்டி அவரிடம் இருந்த பணம் 9 ஆயிரத்து 500 ரூபாயை பறித்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் முகேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி தொழில்பேட்டை சேர்ந்த விஷ்ணு (வயது 24) என்பவரை கைது செய்தனர்.