புதுடில்லி : ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட ஐந்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். ...
டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி பைக் டாக்சிகள் இயங்க மே 5ஆம் தேதி டெல்லி அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ...
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த பிபர்ஜாய் புயலானது குஜராத் மாநிலம் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே ஜூன் 15ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பிள்ளையப்பன் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.நேற்று தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர்..அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்தது. இதனால் ...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் `பிப்பர்ஜாய்’ வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஜூன் 12ம் தேதி (நேற்று) அதிகாலை அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, மும்பையில் இருந்து 560 கி.மீ.தொலைவிலும், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 460கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. ...
தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நான்கு இளம் மருத்துவா்கள் உயிரிழந்துள்ள நிலையில், பணிச் சூழலில் ஏற்பட்ட மன அழுத்தமே இறப்புக்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா் தனுஷ் (24), தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டா் விஜய் சுரேஷ் கண்ணா (38) ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள வடமங்கலகரை புதூரை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 75)விவசாயி, இவர் நேற்று காரமடை – மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார் . அங்குள்ள வேளாங்கண்ணி பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார்.அவரை ...
கோவை ராமநாதபுரம் அங்கண்ணன் தேவர் வீதியை சேர்ந்தவர் வடிவேல், இவரது மனைவி சுகன்யா (வயது 28 ) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் இடத்தை 10–ந் தேதி வீட்டில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் வடிவேல் ...
விருதுநகர்-மதுரை சாலையில் விருதுநகர் மாவட்டச் சிறை இருக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகம், விருதுநகர் மேற்கு காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற இந்த வளாகத்தில் மாவட்டச் சிறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டச் சிறை மொத்தம் 10 அறைகளில் 160 கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி கொண்டது. ஆனால், ...
மகாராஷ்டிராவில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்டதாக, மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் விட்டலை கடவுளாக பாவித்து வழிபடுபவர்கள் வர்காரிய சமூகத்தினர் என குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் பந்தர்பூருக்கு வரி எனப்படும் வருடாந்திர ஆஷாதி ஏகாதசி யாத்திரையின் மேற்கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக புனே நகரத்திலிருந்து 22 கிமீ ...













