திடீரென பற்றிய சொகுசு கார்… அடுத்தடுத்து எரிந்த 6 கடைகள் – கோவையில் பரபரப்பு.!!

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் வென்ஸ்டிசோசா (வயது 31)இவரது கடையில் அரவிந்த் என்பவர் தனது பி.எம். டபுள்யூ சொகுசு காரை பழுதுபார்க்க கொடுத்திருந்தார். காரை பழுது பார்த்த நிலையில் அரவிந்த் காரை எடுத்து சோதனை செய்துவிட்டு ஒர்க்ஷாப் அருகே நிறுத்திவிட்டு உரிமையாளர் வென்ஸ்டி சோசாவிடம் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது திடீரென அரவிந்தின் சொகுசுக்கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது .இந்த தீ மள மளவென பரவி அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது.இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.கோவை தெற்கு பகுதி மற்றும் கோவை புதூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாது தடுத்து அணைத்தனர்.இதில் 6 கடைகள் பி.எம். டபுள்யூ சொகுசு கார் எரிந்து சேதம் அடைந்தது. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.