சென்னை: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக வருகிற 27ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ...
குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? என்று டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி ...
உலகம் முழுவதும் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டாலும், முன்பிருந்த அளவுக்கு இல்லாமல், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிவிட்டனர். இப்படியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று முதலில் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கயிருக்கிறது. சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ...
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு சார்பில் வேஷ்டி , சேலை ,பொங்கல் சிறப்பு தொகுப்பு, கரும்பு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுகளுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்கப்படுவதுண்டு. தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை 2009ம் ஆண்டு முதல் ...
ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெசவுத்தொழில் நவீனமயமாக்கல், ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைவினை மேம்பாட்டுத்திட்டம், ஜவுளித் தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய ஜவுளி உற்பத்திப் பொருட்களை ...
திமுகவில் உட்கட்சி தேர்தல் முடிவடைந்த பிறகு சில புதிய அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்பொழுது புதிய நிர்வாகிகளின் நியமனம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கூட்டம் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள திமுக தலைமை கழகமான அண்ணா ...
திமுகவின் ஊழலை புகார் செய்ய வெப்சைட் தயாரிக்க உள்ளோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக மற்றும் அரிமா சங்கம் சார்பில் வாஜ்பாய் 98 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு 100 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ...
கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு கோவை வருகிறார். பின்னர் இரவு கோவையில் தங்குகிறார். மறுநாள் 25-ந் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓடு தள பாதையை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் மாலை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சரான ...
கோவை: மன உறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு என்னும் மனநல சேவையை மருத்துவ மாணவர்களுக்காக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மன அளவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதனை முதல்அமைச்சர் சென்னை, ...
சென்னை: அதிமுக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள ...