உலகளவில் அதிக அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்காவும், நபராக அமெரிக்க அதிபரும் கருதப்படுகின்றனர். அமெரிக்கா நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்ற வல்லமை பெற்றுள்ளது. அதேநேரம் அதிபரே தவறு செய்தாலும் கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்க அங்கு சட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது சிக்கியுள்ளார் அதிபர் பைடன். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் ...

புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவு சாலை பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ...

சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ...

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று  உண்ணாவிரத போராட்டம். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறநிலையத்துறையை கண்டித்து இன்று  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கோயில் நிலங்கள் சூரையாடப்படுவதாகவும், கோயில்கள் கணக்கில்லாமல் இடிக்கப்படுவதாகவும் பாஜக ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் ...

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் ...

கடலூர் : பாஜக மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நேற்று  நடைபெற்றது . பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தச் செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் பாஜக ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல் 10 ஆண்டுகள் கட்சியிலேயே இல்லாமல் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றிபெற்றேன் என்று கூறிய டிடிவி தினகரன், இடைத்தேர்தலில் போட்டியிடும் தைரியம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ...

சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி கூறியுள்ளார். சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றார். ...

திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து குதிரை வண்டியில் பயணித்து மகிழ்ந்தார். திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் ...