அதிமுக வழக்கு… ஹைகோர்ட்டில் இன்று இறுதி விசாரணை..!

திமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொது தீர்மானம் தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை..

பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் தொடங்க உள்ளது. ஓபிஎஸ் தரப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் மதியம் 2.15 மணிக்கு விசாரிக்கின்றனர்.

இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் உள்ள மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு வராமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எந்த முடிவும் தேர்தல் ஆணையம் எடுக்க கூடாது எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.