பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, கடந்த 30-ம் தேதி நடந்த சட்ட மேலவை இடைத்தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர், திப்பனப்பா கமக்னூர், என்.எஸ். போஸராஜு ஆகிய 3 பேரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். இவர்கள் 3 பேரும் போட்டியின்றி தேர்வாகினர். ...

டெல்லி : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்.இந்த பயணத்தின் போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கையும் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.. ...

சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியதற்காக விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலவளவில் மேலவளவு போராளிகள் நினைவு தின நிகழ்ச்சி கடந்த 30-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் அவர் பேசியதாக ...

கோவை: பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கோவையில் இன்று தொடங்கின. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ளது. ஆணையம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் ...

டெல்லி: அமைச்சரவை மறுசீரமைப்பு விரைவில் நடைபெறலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விஷன் 2047க்கான பணிகள் பற்றிப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற ...

பாரதிய ஜனதா கட்சி-சிவசேனா ஆட்சியில் அமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவார் மற்றும் 8 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர பிரிவு தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். துணை முதல்வராக பவார் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்களான 8 ...

மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டப்படியும் அது முடியாது அணை கட்டி விடுவோம் என்று கூறுவது கர்நாடகாவின் அரசியல் ஸ்டன்ட் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அரசுமுறைப் பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ...

சென்னை: சென்னையில் நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 32, மத்திய சென்னை, தென்சென்னையில் தலா 25 என 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , “கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க ஆணை வெளியிடப்பட்டு அதன்படி கடந்தாண்டு ...

பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் கே. சி. தியாகி ஞாயிற்றுக்கிழமை கூறினார்,.”நம்பிக்கையுடன், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு கூட்டப்படும்” ...