கொடைக்கானல்: அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பாஜக நடத்திய முற்றுகை போராட்டத்தில் என்னை கைது செய்யாததற்காக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். கொடைக்கானலில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று அண்ணாமலை மேற்கொண்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயிலில் தொடங்கி, ...

முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திடீரென நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல இருப்பதாகவும் டெல்லியில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் ...

சென்னை மயிலாப்பூரில் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “ சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம் அங்கீகாரம் திமுகதான் பெற்று தந்தோம். தேர்தல் என்பது திமுக அளித்த 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் அன்று ...

ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் 8வது கிழக்கு பொருளாதார மன்றத்தில்  பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். மோடி இந்தியர்களை ஊக்குவிப்பதன் மூலம் சரியான செயலைச் செய்கிறார் என்றும் கூறினார். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த புடின், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ...

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆக.25-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் மனைவி முனியசெல்வி (29) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ...

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற  தொகுதி அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம்  சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ திவ்யபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டு உடனடியாக தீர்வு ...

லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்கள் நியமனங்களை விரைவாக முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் தாவியவர்களால், பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்’ என, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை ...

சென்னை: ரூ3 கோடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள வரவேற்பின் பின்னணியில் இருக்கும் தேர்தல் கணக்கை விவரிக்கிறது இச்செய்திக் கட்டுரை. தியாகி இம்மானுவேல் சேகரன்.. தென் தமிழ்நாட்டின் கணிசமான வாக்கு வங்கி கொண்ட தேவேந்திரகுல வேளாளர் ஜாதி போற்றி புகழ்பாடும் பெருந்தலைவர். 66 ஆண்டுகளுக்கு முன்னர் ...

பாரிஸ்: இந்தியா, பாரத் என்ற இரண்டு சொற்களிலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்தியாவின் ஆன்மாவை சிதைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பல நாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்பொழுது வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்களின் ...