கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் “ஆம்பூர் சிக்கன் என்ற பெயரில் ஒட்டல் உள்ளது. .இங்கு செந்தில் மோகன் என்பவர் 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரூ. 47 லட்சத்து 37 ஆயிரத்து 999 ரூபாய்க்கு சிக்கன் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இது ...

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, ஆனந்தா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30) தொழில் அதிபர் .இவர் கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் பெற்றோரின் எதிர்ப்பு மீறி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு அன்னூரில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து இளம்பெண் தனது குழந்தையுடன் மேட்டுப்பாளையத்தில் ...

டெல்லி: புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 2ம் தேதிக்குள் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் அவர் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் பின்னணியில் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ...

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் விபத்து ஏற்படுத்தி, தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்ட வழக்கில் பிரபல யூட்யூபர் டி.டி.எஃப். வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு அக்டோபர் 3ம் தேதி ...

தமிழகத்தில் சுற்றுச் சூழல் விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, வரி ஏய்ப்பு செய்து, முறைகேடாக மணல் லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் , சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டவிரோத ...

கோவை செல்வபுரம் கல்லா மேடு,தெற்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 33) .இவர் அந்த பகுதியில் 27 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஆட்டு பட்டியில் இருந்த 2 ஆடுகளை காணவில்லை.யாரோ இரவில் திருடி சென்று விட்டனர்.இதன் மதிப்பு ரூ.40, ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சுரேஷ் செல்வபுரம் போலீசில் புகார் ...

கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் யூசுப் ஆகியோர் அந்தப் பகுதியில் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ...

கோவை அருகே உள்ள அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் நேற்று தனது நண்பர் மாரிசெல்வத்துடன் சங்கோதிபாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது சஞ்சய்கண்ணன் சந்தான குமார் ஆகியோர வழிமறித்து அரிவாளால் விக்னேஷ் ,மாரிசெல்வம் ஆகியோரை வெட்டினார்கள்.இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் ...