நள்ளிரவில் ஆடுகள் திருட்டு – 2 பேர் கைது..!

கோவை செல்வபுரம் கல்லா மேடு,தெற்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 33) .இவர் அந்த பகுதியில் 27 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஆட்டு பட்டியில் இருந்த 2 ஆடுகளை காணவில்லை.யாரோ இரவில் திருடி சென்று விட்டனர்.இதன் மதிப்பு ரூ.40, ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சுரேஷ் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போத்தனூர் என். பி. இட்டேரியைசேர்ந்த மோகன் நியாஸ் ( வயது 26 )யாசர் அராபத் (வயது 21) ஆகியோரை நேற்று கைது செய்தனர். 2 ஆடுகளும் மீட்கப்பட்டது .இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.