திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேச பிரபு. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை கூலிப்படையைச் சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் நேசபிரபு படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த குஞ்சையப்பன் மகன் பிஜு(வயது 48) மற்றும் நாராயணன் குட்டி மகன் வினயன்(வயது 54) ஆகியோரை கடந்த 15.01.2024 மற்றும் 16.01.2024 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...
கோவை : ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை வாங்கி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஜனனி பிரியா ( ...
கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள ரங்கசமுத்திரம் புது காலனியை சேர்ந்தவர் தர்மதுரை. இவரது மனைவி கவிதா ( வயது 27) நேற்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபாகரன் ( வயது 29) என்பவர் அவரது வீட்டினுள் புகுந்து அவரது வாயை பொத்தி, மிரட்டி, மானபங்கம் செய்ய முயற்சித்தாராம்.அவரை ...
கோவை மாவட்டம் காரமடை அடுத்த கண்ணார் பாளையம் ரோட்டில் தனியார் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்குள்ள டாக்டர் 10-ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. இணை இயக்குனர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் முதன்மை மருத்துவர் சேரலாதன், காரமடை ...
கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கோவை ஆர் .எஸ் . புரம் ,சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள மாநகராட்சி பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் பொதுக் கழிப்பிடம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆர். ...
கோவை சின்ன தடாகம் ,வீரபாண்டி மெயின் ரோட்டில் உள்ள செங்கல் சூளையில் 130 கிலோ பழைய இரும்புகள் திருடப்பட்டன . இதன் மதிப்பு ரூ 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யபட்டது. சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்கு பதிவு செய்து சின்ன தடாகம் குட்டை வழியை சேர்ந்த செல்வராஜ் (வயது ...
கோவை மருதமலை ரோட்டில் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்குள்ள அலுவலகத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் புனிதா.இவர் நேற்று அலுவலகத்தில் பணியில் இருந்தார்.அப்போது ஒருவர் அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து புனிதாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, தாக்கி, பணி செய்ய விடாது தடுத்துள்ளார் . இதுகுறித்து கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வடவள்ளி போலீசில் புகார் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி என் மில், சேரன் நகரை சேர்ந்தவர் ஜெமினி ( வயது 47) இவருக்கு 24- 8 -20 24 அன்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் மிகப்பெரிய நிறுவனத்தில் பகுதிநேர பணி இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்ததாக சூலூர் பக்கம் உள்ள சின்ன வதம்பச்சேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (வயது 35) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ ...













