ஓய்வு பெற்ற ஆசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு.!!

கோவை தடாகம் ரோட்டில் உள்ள பி. என். பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 61) ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்.இவர் நேற்று மாவட்ட கருவூலத்துக்கு தனது தம்பி ரவிக்குமாருடன் காரில் வந்திருந்தார். அங்கு தன்னுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து ரூ. 3 லட்சம் ஸ்டேட் வங்கி மூலம் பெற்றுக் கொண்டார். அந்த பணத்தை காரில் வைத்து விட்டு ரயில் நிலைய ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த பணத்தை காணவில்லை .யாரோ கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து நாகராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். சப்- இன்ஸ்பெக்டர்அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.