கோவை உணவு தயாரிப்பு நிறுவனத்தில் ரூ 6 லட்சம் கையாடல் – கேஷியர் கைது..!

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது.இங்கு நீலகிரி மாவட்டம், கொல்லப்பள்ளி, சேரன் கோட்டை சேர்ந்த சுரேந்தர் (வயது 31) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார்.இவர் அந்த நிறுவனத்திற்கு உரிய பணம் ரூ 6 லட்சத்து 5 ஆயிரத்தை கையாடல் செய்துவிட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் அதன் உரிமையாளர் கிருஷ்ணகுமார் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து கேஷியர் சுரேந்தரை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..