வரதட்சனை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் – கோவை போலீஸ்காரர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையம் , அம்மா பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் .இவரது மகன் சுரேஷ் (வயது 45)இவர் தற்போது ரத்தினபுரி சுப்பாத்தாள் வீதியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் .கோவையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா( வயது 40)|இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவர் மனைவி கவிதாவிடம் நகை- பணம் வாங்கி வருமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதற்கு அவரது தாயார் ஈஸ்வரி தந்தை ஜெயராஜ் சகோதரர் செல்வராஜ் மைத்துனர் சரவணகுமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து கவிதா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக சிறப்பு இன்ஸ்பெக்டர் சுரேஷ் (வயது 45)இவரது தாயார் ஈஸ்வரி தகப்பனார் ஜெயராஜ் தம்பி செல்வராஜ் மைத்துனர் சரவணகுமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல் வரதட்சனை கொடுமை ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..