மும்பை நாக்பூர் ஓல்டு ஹைவேயில் பஸ் டிரக் மோதி விபத்து – 7 பேர் பலி..

மும்பை நாக்பூர் ஓல்டு ஹைவேயில் இன்று காலை ஏழு மணியளவில் ஏற்பட்ட பஸ் – டிரக் மோதலில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிந்த்கேடராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் எமர்ஜென்சி சேவை துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தது.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் புனேயிலிருந்து மெஹேகர் நோக்கிச் சென்ற பேருந்து எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த டிரக் மீது மோதியதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது.