கோவை பேருந்து நிலையத்தில் பஸ் டிரைவர்கள் மோதல் – 4 பேர் மீது வழக்கு..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவர்,கண்டக்டர், மெக்கானிக் ஆகியோருக்கு இடையே பஸ் புறப்படுவது (டைமிங்) தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த 3 பேரும் சேர்ந்து பஸ் டிரைவர் ராஜாவை தாக்கினார்களாம்.  இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து காட்டூர் போலீசில் டிரைவர் ராஜா புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மோதலில் ஈடுபட்ட மற்றொரு தனியார் பஸ் டிரைவர் சுந்தரமூர்த்தி ,கண்டக்டர் தயாளன் மெக்கானிக் சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.மற்றொரு பஸ் டிரைவராக சுந்தரமூர்த்தி ( வயது 33 )கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரைவர் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .