குடிபோதையில் அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி கைது..!

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம் பாளையம், இடையர்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மகன் செந்தில் குமார் ( வயது 28) பி.இ . பட்டதாரி.நேற்று இவர் சுந்தராபுரம்- இடையர்பாளையம் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி முத்துக்குமார் (வயது 26 ) என்பவர் குடிபோதையில் அங்கு வந்தார் .அவர் செந்தில்குமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்சில் அவரை ஏற்றும் போது இறந்து விட்டார்.இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பி முத்துக்குமாரை நேற்றிரவு கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.