கோவை ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து அடையாளம் தெரியாத ஒருவர் தற்கொலை..!

கோவை ரயில் நிலையத்தில் உள்ள 5 -வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒருவர் திடீரென்று ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து ரயில் முன் படுத்துக் கொண்டார். இதை ரயில் இன்ஜினியர் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் ரயில் புறப்பட்டபோது ரயிலில் தலை நசுங்கி அவர் அதே இடத்தில் பலியானார்.தகவல் அறிந்த  ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு வயது  55 இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை இது குறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.