கோவை கல்லூரி மாணவர் அறையில் லேப்டாப், செல்போன் திருட்டு..!

காரமடை அருகே உள்ள கழட்டியூரை சேர்ந்தவர் லக்கன்குமார். இவரது மகன் தீபக் ஈஸ்வர் (வயது19 )இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் படித்து வருகிறார் அங்குள்ள இ.பி. காலணியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று காலையில் அறையை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்தபோது அறையில் இருந்த லேப்டாப் செல்போன் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் இது குறித்து தீபக் ஈஸ்வரர் குனியமுத்து போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்