வீட்டில் தூங்கிய தம்பதியை பெட்ரோல் ஊற்றி கொள்ள முயற்சி- மர்ம நபரருக்கு போலீஸ் வலை..!

கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டையாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்ற செல்லத்துரை (வயது 50). கூலித்தொழிலாளி.
சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு யாரோ மர்ம நபர் கதவு இடைவெளியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றனர்.
தீ எரிவதை கண்டு தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த கணவன் -மனைவி தீயை அணைத்தனர். இதில் சின்னத்தம்பிக்கு தோளில் தீக்காயம் ஏற்பட்டது. வெளியே வந்து பார்த்தபோது தண்ணீர் பாட்டில் பெட்ரோலுடன் இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சின்னத்தம்பி இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவு வீட்டில் படுத்து தூங்கிய தம்பதியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.