கோவை தெற்கு எம்.எல்.ஏவும்,பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா உள்பட 25 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளன. சுத்தமான குடிதண்ணீர் வசதி இல்லாதோர் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் ...
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். அவரது இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் ...
தென்காசி: 2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.பழனி நாடாரும், அதிமுக சார்பில் வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். ...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, தங்கதுரை, ஜீவிதா உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லால் ஸலாம். இந்த படத்தை லைகா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தின் படப்பிடிப்புகள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ...
‘காவாலா’ பாடலுக்கு சிம்ரன் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இதன் படப்பிடிப்பு ...
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த எஸ்.ரோஹித் கிருஷ்ணாவுக்கு ரூ.3 லட்சம், ஸ்பெயின் சாண்டாண்டரில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப். ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த எஸ்.சங்கர் முத்துசாமிக்கு ரூ.4 லட்சமும், ஆந்திராவில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ...
தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 13 மனுதாரர்கள் மற்றும் ...
கோடநாடு வழக்கில் கொள்ளை நிகழ்ந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு… மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அதில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் ...
கடந்த மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. தங்கம் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.24 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ஒரு கிராம் 5,500 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,000 ஆகவும் ...













