திருச்சியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது 2015-ல் மழை வெள்ளம் தாக்கியபோது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால், இம்முறை பேய் மழை பெய்த போதும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கைகள் எடுத்ததால் சென்னையில் பெருமளவு பாதிப்புகள் குறைந்துள்ளன. இரண்டாவது முறையாக தென் மாவட்டங்களை மழை வெள்ளம் ...

குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில், சிறார் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். திருச்சி கீழபுலிவார்டில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் தற்பொழுது 11 சிறார்கள் ...

கோவை டிச 26கோவை மாவட்டம்சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களும், தமிழகத்தில் உள்ள பல மாவட்டத் தொழிலாளர்களும் சூலூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.மேலும் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு ...

முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், jct பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா துவங்குவதற்கு முன்பாக ஜமாப், ...

உலகத் தமிழ் நெறிக் கழகம் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 227-வது நினைவு நாள் ,திருவள்ளுவர் நாட்காட்டி வெளியீட்டு விழா கோவை அண்ணாமலையாரங்கில் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. உலகத் தமிழ் நெறிக் கழக செயலாளர் சொ. சிவலிங்கம், துணைத் தலைவர் குரு பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...

பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் திரு அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறவு படம் வைத்து மரியாதை செலுத்தினர். தலைமை:- திரு முருகையன் நகர தலைவர் பாஜக மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ...

கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை- டெக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் ஆகியோர் இணைந்து 22.12.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்திய இரத்ததான முகாம் கல்லுாரியின் செயலாளர் திரு. K.C. கருப்பணன் அவர்கள் தலைமையில் நடந்தது. கல்லூரியின் தலைவர் திரு.P.வெங்கடாசலம், இணைச்செயலாளர் திரு.G.P.கெட்டிமுத்து, இயக்குநர் திரு. K.R. கவியரசு ...

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழாவினை கல்லூரியின் செயலாளர்.K.C. கருப்பணன் அவர்கள் பட்டம் பெறவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவின் துவக்கத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டு அறிக்கை வாசித்தார். முதல்வரின் அறிக்கையை ...

சூலூர் திருச்சி ரோடு காவல் நிலையம் அருகில் செயல்பட்டுக் கொண்டிருந்த சர்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும்பணி துவங்க இருப்பதால் தற்காலிகமாக சூலூர் கலங்கள்ரோடு பழனியப்பாரைஸ் மில் உள்ளே அமைந்துள்ள கட்டிடத்தில் இன்று26/12/2023 முதல் செயல்படுகிறது இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்துக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி, அரசூர், இடையர்பாளையம், கணியூர், கண்ணம்பாளையம், கரவழிமாதப்பூர், கருமத்தம்பட்டி ...

கோவைதொண்டாமுத்தூர் அருகே உள்ளபோளுவாம்பட்டி வனச்சரகம் நரசீபுரம் பிரிவில் தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் பெரியசாமி தோட்டம் களத்துக்காடு பகுதியில் இன்று காலை 5 மணியளவில் விராலியூர்,இந்திரா காலனியைச் சேர்ந்த சின்னக்குட்டி (வயது 73) என்பவர் இயற்கை உபாதை கழிக்க வந்தார்.அப்போது அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை இவரை தாக்கியது. இதில்படுகாயம் அடைந்தார். ...