டெல்லி: பாலியல் வன் கொடுமையால் உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனுதாரர் இன்று அல்லது நாளை காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையால் உருவான கருவை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவேன்றுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் ...

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், கடந்த 24-ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் விண்ணப்பதிவு முகாமினை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், ...

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். இதில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை ...

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது. பின் ஆகஸ்ட் ...

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டுபிடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்க மறுக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதையடுத்து கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு அரசுமீது விரைவில் ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் ஹரிஹரன் ( வயது 27 )இவர் நேற்று கோவை திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பங்கு சந்தைக்கு எதிர்ப்புறம் மேம்பாலத்தின் முகப்பில் உள்ள தடுப்புச் சுவரில் பைக் மோதியது. இதில் ஹரிஹரன் படுகாயம் அடைந்தார்.அவரை ...

கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கணபதி மாநகரச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜேசுதாஸ் என்பவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இது நடத்தி ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள கனியூரில் ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வாகராயம்பாளையம் கோடுல் பிரசாத் ( 23 ) திருப்பூர் ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆலம்பாளையம் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசுக்கு தகவல் வந்தது.சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெரிய கவுண்டனூர் முத்துசாமி ( வயது 50) டி கோட்டம் பட்டி காளிமுத்து( ...

கோவை ரங்கே கவுண்டர் வீதியில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலுக்கு சொந்தமாக ஒப்பணக்கார வீதி ரங்கேகவுடர் வீதியில் அமைந்துள்ள சுமார் 1 கோடி 50 லட்சம் மதிப்புள்ளான 2,200 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக கட்டிடங்களை 7 பேர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக இந்து சமய அறநிலையைத் துறைக்கு தகவல் ...