கோவையில் வீட்டில் வைத்து விபசாரம் – 2 பேர் கைது..!

கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கணபதி மாநகரச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜேசுதாஸ் என்பவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இது நடத்தி வந்த நாமக்கல் மாவட்டம் பச்சாபாளையம், நத்தமேடு சரவணன் (வயது 23) நவின் (வயது19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது..