கோவைவடவள்ளி அருகே உள்ள நவாவூர் ,துர்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 86) மூத்த வழக்கறிஞர். இவரது வீட்டின் முகவரியை போலியாக கொடுத்து ஒரு பெண் ஆதார் கார்டு வாங்கி இருப்பதாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து செல்வபுரம், வடக்கு அவுசிங் யூனிட்டை ...
கோவை மதுக்கரை அருகே உள்ள சீராபாளையம், எஸ். எஸ். நகரை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 57 )இவர் 2021 ஆம் ஆண்டு 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதுக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சவுக்கத் அலிக்கு ...
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு . இவரது மகள் யஸ்வினி ( வயது 24) இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சான்றிதழ்கள் வாங்க கோவைக்கு வந்தார். சான்றிதழ் வாங்கிவிட்டு பஸ்சில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது கழுத்தில் இருந்த 8 கிராம் தங்கச் செயினை யாரோ திருடிவிட்டனர். இது ...
கோவை ஒண்டிப்புதூர் சவுண்டம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52) இவர் கடந்த 5 ஆண்டுகளாக அகமது என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன் தினம் ஆட்டோவை கஸ்தூரி நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார் . திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை. ...
சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று முன்தினம் அந்த உணவகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 5 சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டனர். உணவகத்தை நடத்தி வரும் ஜன்னத்துல் குப்ராவிடம்(60) விசாரித்தபோது, ...
கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரமடை பகுதியில் உள்ள சீளியூர், தேக்கம்பட்டி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுப்பிரமணி (வயது 64) முருகானந்தம் ...
கோவை : பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில் நடந்தது. மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் ...
கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம் என். ஆர் .வி.நாயுடு வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 40) இவரது கணவர் சிவகுமாருடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்பவர் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம்.. இதை அறிந்த மனைவி சித்ரா வனிதாவிடம் தட்டி கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சித்ராவை காலால் மிதித்து கீழே ...
கோவையை அடுத்த வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூரில் பழமை வாய்ந்த அருள்மிகு. தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலுக்கு நேற்று காலை பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதிலிருந்து பணங்கள் திருடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். ...
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 52) ஜவுளி தொழில் அதிபர். இவரது மனைவி ஆர்த்தி (வயது47 ) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறினார். அதே எண்ணில் இருந்து வீடியோ காலில் ஆர்த்தியை தொடர்பு கொண்டு நீங்கள் ...













