பைக் திருட்டு – 2 கல்லூரி மாணவர்கள் கைது..!

கோவை கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பைக் திருடர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்த பாலமுருகன் ( வயது 19) தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் நகரச் சேர்ந்த அஸ்வின் ( வயது 21) என்பது தெரிய வந்தது . இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர் . இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது..