மதுரையில் பகீர் சம்பவம்… பாஜக மாவட்ட பொறுப்பாளர் ஓட ஓட விரட்டி படுகொலை – போலீசார் குவிப்பு.!!

மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள சங்குநகர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்தத சக்திவேல் அவர்களிடம் தப்பிக்க இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பயத்தில் ஓடினார். ஆனால் மர்ம கும்பல் விடாமவ் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரை அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தனிப்பட்ட மோதல் காரணமாக சக்திவேல் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து மதுரையில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.