ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை: கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

கோவை: ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06046), இன்று மற்றும் அடுத்த மாதம் 20-ந்தேதி இரவு 9 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னையை சென்றடையும். இந்த ரயில், ஆலுவா, திருசூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரகோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளத்தில் இடையிலான சிறப்பு ரயில் (06045), சென்னையில் இருந்து நாளை (30-ந் தேதி) மற்றும் 21-ந் தேதி பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் கோவைக்கு 30 மற்றும் 21-ந் தேதி இரவு 1.17 மணிக்கு வந்து 1.20-க்கு புறப்பட்டு செல்லும். சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளத்தில் இடையிலான சிறப்பு ரயில் இரவு 10.12-க்கு வந்து 22.15-க்கு பிறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.