ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து பொது வினியோக திட்ட ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் வருவாய் துறை ஊழியர்கள் ராமாபுரம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே மொபட்டில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற போது வாகனத்தில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் ...
வாஷிங்டன்: பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை கவலை அளிக்கிறது எனவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் பைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்நிலையில் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீது மத துவேஷம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. ...
திருப்பதி மலைப்பகுதியில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மூன்றாவது சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் கடந்த 11ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா திடீரென மாயமானார். அவரை சிறுத்தை இழுத்துசென்றது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற ...
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுவதால், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு தலைமைச் செயலகத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடுதலைமைச் செயலக சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில், முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பு வகித்தபோது, தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்யும் நோக்கில், அண்ணா ...
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் முகாமை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 24ம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் முதற்கட்டமாக 20765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்குவிண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் ...
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வியக்கும் வகையில், இந்த மாநாடு சிறப்பாக அமையும். மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். இந்த ...
தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாகாவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் வரை ...
சிம்லா: இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இதுவரை 81 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இமாச்சலில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை ஜூலை, 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தது. இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து, நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் ...













