இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர் மேலும் போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது, ...

கோவை உக்கடம் கோட்டைமேடு எல். எம் ஆர் .வீதியை சேர்ந்தவர் ஜான்ஷா. இவரது மனைவி பர்சனா (வயது 28) நேற்று இவர் வீட்டை திறந்து போட்டுவிட்டு மாடிக்குச் சென்று தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை பார்க்கச் சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் செயினை பணம் ரூ 8ஆயிரம் ஆகியவற்றை ...

கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் ( வயது 68) நேற்று இவர் சுந்தராபுரம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாகவந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில். சேர்த்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் ...

வள்ளலார் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாத புகைப்படத்தை பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற ...

சென்னையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு பகுதியில் ...

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை ...

ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, தைவானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இன்றைய நாளில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். நேற்றைய நாளின் முடிவில் 95 பதக்கங்களை இந்தியா வென்று இருந்த நிலையில், இன்று 3 தங்காம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என தற்போது ...

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வாகன ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டிருக்கிறார். டிடிஎஃப் வாசன் பிரபல யூடிபராக இருந்து வந்தார். பைக் ஸ்டண்டுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்த அவர், அண்மையில் காஞ்சிபுரம் அருகே பைபாஸில் ...

பரந்து விரிந்து தண்ணீர் பாய்ந்தோடுவதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் என அனைவரும் போற்றும் மேட்டூர் அணையின் தற்போதைய நிலை மிக மிக மோசமாக உள்ளது. அணை தற்போது கரடுமுரடாகக் காட்சியளிக்கிறது. பாறைகள், ஆங்காங்கே திட்டுகள், வெடித்து பிளவுபட்ட நிலப்பரப்புகளாகவும் மேட்டூர் அணை மாறியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் அணைகளில் தண்ணீர் ததும்ப காணப்படும். ஆனால் ...

விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நேற்று முதல் விமான கட்டணத்தை ரூ. 300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. ...