முருகனின் அறுபடைவீடுகளில் 3 வது படைவீடாக உலக பிரசித்தி பெற்ற ஆலயம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். இந்த மலைக்கோவிலில் சுவாமியை தரிசிக்க அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை, யானைப்பாதை இரண்டுமே உள்ளது. இத்துடன் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் அனைவரும் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரயில் சேவைகளும் ...

சென்னை: தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ள நிலையில், டிஜிபி ரேஸில் இருக்கும் மொத்தம் 12 பேர் உள்ளதாகவும், அதில் ஐந்து பேர் டாப் இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக காவல்துறையில் உச்சபட்ச ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கரளவாடி கிராமத்தில் உள்ள விவசாயி ...

ஈரோடு மாவட்டம்  புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் ...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்தால் முதல்வரின் குடும்பம் கூட சிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல். உண்மையில் நடந்தது என்ன? விசாரணையில் யாருக்கு தண்டனை கிடைக்கும்? அதற்கு வழக்கறிஞர்களின் விளக்கம் என்ன? கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் ...

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் ...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நீதிதுறை நீதிமன்ற வளாகத்தில் சர்வேதேச யோகா தினத்தை முன்னிட்டு குற்றவியல் நீதிதுறை நீதிமன்ற நீதிபதி ஆனந்தவள்ளி தலைமையில் யோகா பயிற்சி நடைப் பெற்றது. அரசு வழகறிஞர் யோகா பயிற்றுநர் நல்லூர் மயில்ராஜ், ஆலடிமானா, வழக்கறிஞர், சங்க பொருளாளர் ஆரோக்கியசாமி, முன்னாள் சங்க செயலாளர் சாந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ...

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஜே எஸ் எஸ் மகாவித்யா பீடம் கர்நாடகத்தின்  மாநில எல்லை  மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தியாவின் சுதந்திர பவள விழாவை ஒட்டி மாநில எல்லை மேம்பாட்டு கலாச்சார விழா தாளவாடியில் உள்ள கிளாசிக் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக தாளவாடி பசவேஸ்வரா சர்க்கிளில் இருந்து இருந்து மங்கள வாத்தியம், நந்தி கம்பம், வீரபத்ர ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்  நடமாடுகின்றன. இதற்கிடையே நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்காக கார் ...