திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி கிழக்கு மாநகரம் கிழக்குத் சட்டமன்ற தொகுதியில் டி வி எஸ் டோல்கேட் ரவுண்டானவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவச்சிலை அமைய உள்ள பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை ...

தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மிக கனமழையால், பல்வேறு இடங்கல் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. பெரிதும் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ...

தமிழகம் முழுவதும் இன்று மக்களுடன் முதல்வர் என்னும் தலைப்பில் சிறப்பு முகாம் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் எனும் தலைப்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பிலும் வருவாய் வட்டாட்சியர் மேலாண்மை துறை சமூக ...

அய்யப்பன்தாங்கல் அருகே மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் ஈடுபட்டனர். அய்யப்பன்தாங்கலில் இருந்து பரணிபுத்தூர் செல்லும் சாலையில் கொளுத்துவான்சேரி பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ...

முதலமைச்சர் ஸ்டாலின்கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு நினைவாக கோவை மத்திய சிறைவளாகத்தில் 165 ஏக்கரில் மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா பணிகளுக்கான திட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் இன்று கோவைக்கு நேரில் வந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதலமைச்சர் ...

கோவை அருகே உள்ளஒத்தக்கால் மண்டபம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45) லாரி டிரைவர் .இவர் அங்குள்ள மேம்பாலத்துக்கு அருகில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கணேசனை மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனின் கழுத்தில் வைத்து மிரட்டி ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவல்துறையினர் ...

கோவையை அடுத்த கே. ஜி. சாவடி பக்கம் உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்தவர் ( பூபதி வயது 28 ) விவசாயி இவரது மகள் ஹரினி ( வயது 3) இந்த நிலையில் பூபதி நேற்று தனது தோட்டத்திற்கு டிராக்டரில் சென்றார் அப்போதுவீட்டில் இருந்த தனதுமகள் ஹரினியையும் அழைத்துச் சென்றார். அப்போது அவர் டிராக்டரை ஓட்ட அவரது ...

கோவை ஒண்டிபுதூர், தெப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( வயது 57) ஜோதிடர். இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானா.ர் மேலும் அவர் முகத்தில் கீழ் தாடை இல்லாததால் மனக்கவலையில் இருந்து வந்தார் .இந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று ...

ஊட்டி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேல் தட்டப்பள்ளம் தனியார் எஸ்டேட்டில், 3 வயதுடைய ஆண் சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கி இறந்துள்ள நிலையில், அதன் மூன்று கால்கள் வெட்டப்பட்டுள்ளது. டி.எப்.ஓ., கவுதம் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தபின் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. டி.எப்.ஓ., உத்தரவுபடி, கோத்தகிரி மற்றும் கீழ் ...