டிராக்டர் எந்திரத்தில் சிக்கி 3 வயது சிறுமி பரிதாப சாவு…

கோவையை அடுத்த கே. ஜி. சாவடி பக்கம் உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்தவர் ( பூபதி வயது 28 ) விவசாயி இவரது மகள் ஹரினி ( வயது 3) இந்த நிலையில் பூபதி நேற்று தனது தோட்டத்திற்கு டிராக்டரில் சென்றார் அப்போதுவீட்டில் இருந்த தனதுமகள் ஹரினியையும் அழைத்துச் சென்றார். அப்போது அவர் டிராக்டரை ஓட்ட அவரது மகள் இடது பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். தோட்டத்துக்கு சென்ற பிறகு பூபதி களை எடுப்பதற்காக டிராக்டரில் பொருத்தப்பட்ட களை பிடுங்கும் எந்திரத்தை இயக்கினார். அப்போது டிராக்டரில் இருந்து சிறுமி திடீரென நிலை தடுமாறி சுழன்று கொண்டிருந்த களைபிடுங்கும்எந்திரத்தில் சிக்கினார். இதில் சிறுமி தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதே இடத்தில் இறந்தார். தந்தை கண்முன்எந்திரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் மகள் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.