சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்பில் மகேஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு தேதி விவரங்கள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ...

டெல்லி: மாலத்தீவுகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. லட்சத்தீவுகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் இஸ்ரேல் முன்வந்துள்ளது. மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்றது முதலே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக்கி வருகிறார். மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்களை வெளியேற்றினார் முய்சு. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கை கோர்த்து நிற்கிறது மாலத்தீவு. முய்சுக்கு முன்னர் மாலத்தீவு ...

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’15-ஆம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக ...

பெங்களூர்: கிருஷ்ணா, கோதாவரி ஆற்று படுகையில் இருந்து முதல் முறையாக நேற்று கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் விரைவில் தினமும் 45 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியா ...

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸுக்கு சொற்பமான இடங்களை ஒதுக்க முன்வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ...

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஜனவரி ...

கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். தொழில் மற்றும் வேலை காரணமாக கோவையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். சொகுசு பயணம் மற்றும் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதது ...

பிரான்சுக்கு புதிய பிரதமரை அறிவிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாகவும், இன்று அவர் புதிய பிரதமர் தொடர்பில் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சைப் பொருத்தவரை, பொதுவான கொள்கைகளை முடிவு செய்பவர் ஜனாதிபதி என்றாலும், அரசின் அன்றாட நிர்வாகத்தை கவனிப்பது பிரதமர்தான். ஆகவே, நாட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் அவர் தலைதான் ...

டாக்கா: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால், மற்ற 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வீட்டுச் சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் ‘வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி)’ உள்பட 15 எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. அதனால் 41.8 சதவீத வாக்குகளே ...

சென்னை: சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி அன்று ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கும் சுற்றுப்பயணம் செல்லக்கூடும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இந்தப் ...