தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சொலையாறு அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ் செல்வன் தலைமையில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் . இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்னும் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் கணவருடன் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவது வழக்கம். அதைப்போல் அவர் விடுமுறை நாட்களில் தனது சொந்த ...
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ண பலூன்களையும் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார். ...
மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த டீயைக் கொடுத்து தாலி, கம்மல் போன்ற தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர் . கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மதியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரோணிகா(56), தமிழ்செல்வி (44). உறவினர்களான இருவரும் மும்பையில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று ...
டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரின் விருதுகளானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் விருது என்பது வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டு ...
பாரமுல்லா: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்கள் ஒன்றாக இணைந்து காஷ்மீர் கிராமிய நடனம் நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ‘கஷுர்ரிவாஜ்’ கலைத் திருவிழா நேற்றுஏற்பாடு செய்யப்பட்டது. பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட குத்துவாள் ராணுவ பிரிவினரும் இந்திரானிபாலன் அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியை ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பத்ரி நாராயணன். இவர் கோவை மாவட்டபயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன் திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.இவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முழு கவனம் ...
கேரள மாநிலம் மலப்புரம் பெரிய மாத்தூரை சேர்ந்தவர் ஜோபி வர்கீஸ் (வயது 46) தேங்காய் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் பல்வேறு இடங்களுக்கு எண்ணை அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு தொழில் ரீதியாக கோவை குனியமுத்துரை சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை மேலாளர் வில்சன் ராபின் ( வயது 38 ...
ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதன் தரத்திற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில்2024 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (12.07.2024) புது டில்லியில் உள்ள பாரத் மண்டபம் அரங்கில் மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ...













